Tuesday, January 5, 2010

தெற்கு கடல் நோக்கி சாகர் நிதி கப்பல் பயணிக்கிறது

இந்திய தட்ப வெட்ப நிலை குறித்து ஆராய்ச்சி நடத்த தெற்கு கடல் நோக்கி சாகர் நிதி கப்பல் பயணிக்கிறது
தெற்கு நோக்கி சாகர் நிதி கப்பல் பயணிக்கயிருக்கிறது. வரும் திங்களன்று இந்திய தனது முதல் திட்டமிட்ட பயணத்தை தெற்கு கடல் நோக்கி கோபன்ஹேகன்
மாநாட்டின் முடிவுக்குபின் 2010 ஜனவரி 11ஆம் தேதி துவங்கவுள்ளது. இது தேசிய அன்டர்டிகா கடல் ஆராய்ச்சி மையத்தின் நான்காவது பயணமாகும். இந்த பயணமென்பது தட்ப வெட்ப மாற்றம் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வுச் செய்வதற்காக திட்டமிடபட்டுள்ளது. இந்த பயணம் மூலம் இந்திய விஞ்ஞானிகள் முதல் முதலாக தெற்கு கடல் எல்லை பகுதியில் 55டிகிரி குளிரை பெருட்படுத்தாமல் பயணிக்கயுள்ளார்கள். இந்த சாகர் நிதி கப்பலானது பனிக்கட்டிகளை கிளித்துச் செல்லும் திறனுடையது. இது கோவாவில் இருந்து 25
விஞ்ஞானிகளை ஏற்றிக் கொண்டு ஜனவரி 11 அன்று மோரிசியாஸ் செல்லயிருக்கிறது. பின் அங்கு இருந்து தென்பகுதி செல்ல இருக்கிறது. இந்த பயணம் அடுத்த
ஏப்ரல் 2010ல் முடிவடையும். இதன் மூலம் விஞ்ஞானிகள் கடலில் ஏறாதாழ 20 ஆராய்ச்சிகள் முப்பத்தைந்து டிகிரியில் இருந்து ஆறுவத்தாறு டிகிரி குளிரில் தெற்குகடல் பகுதியில் ஆராய்ச்சி மேற்கொள்ளவுள்ளனர். சாகர்நிதி கப்பலில் பனிகட்டியிலிருந்து 6000 மீட்டர் அடியில் துலையிட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ள ஏதுவான உபாகரணங்கள் உள்ளது. அதுமட்டுமில்லமால் அங்கிருந்து வண்டல்கள் சேகரித்தும், வண்டல்கள் உருவாகுவதில் உள்ள மாற்றங்கள், நீரின் கனம் மற்றும் இதர தனி தன்மையில் வரையறை குறித்த தகவல்களை சேகரித்து அதை இதற்கு முன்பு சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒட்பிட்டு தற்போது ஏற்படும் தட்ப வெட்ப மாற்றங்களுக்கு காரணங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆராய்ந்து கண்டுபிடித்து உறுதிபடுத்தப்படும்.

No comments:

Post a Comment