Tuesday, December 29, 2009

ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் செக்ஸ் விவகாரம்.

தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதை மத்திய அரசு ஒத்தி வைத்ததைக் கண்டித்து ஆந்திராவில் ஒரு பக்கம் கலவரம் நடந்துக் கொண்டிருக்கும் வேலையில் ஆந்திர கவர்னர் நாராயண் தத் திவாரியின் செக்ஸ் விவகாரம். மறுபக்கம் ஆந்திர மாநிலத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது.
தெலுங்கானா தனி மாநிலமாக உருவாக்கப் போவதில்லை என்று மத்திய அரசு கூறியது. இதை தொடர்ந்து தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அனைத்துக் கட்சிகளின் 70 எம்.எல்.ஏக்களும் 13 ஆந்திர அமைச்சர்களும் தங்கள் பதவியை ராஜினமா செய்துள்ளனர். இந்த நிலையில் ராஜினாமா செய்த அமைச்சர்களின் 9 பேர் டில்லி சென்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் மூகர்ஜியை சந்தித்து உடனே தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
தனி மாநில கலவரத்தில் இறங்கிய பொதுமக்களும் மாணவர்களும் 150க்கும் மேற்பட்ட பஸ்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இதற்கிடையில் 2 ரயில் நிலையங்கள் தீ வைக்கப்பட்டடுள்ளன. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 8 மாணவர்களை மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். இப்படி எரியும் ஆந்திராவில் எந்த பிரச்சனையையும் கவனிக்க நேரமில்லாமல் இளம் பெண்களுடன் உல்லாசத்தில் ஆந்திர கவர்னர் திவாரி.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்தான் இந்த என்.டி.திவாரி (வயது 86) 1980, 90களில் இந்திய அரசியலின் உச்சத்தில் இருந்தவராம். ராஜீவ்காந்தி படுகொலைக்கு பிறகு 1991ல் இவர்தான் பிரதமராவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர். அப்போது நடந்த தேர்தலில் 800 ஒட்டுகளில் தோல்வி அடைந்தால் அவரால் அந்த உயரிய பதவிக்கு வரமுடியவில்லை. இந்திய அரசியல் தலைவர்களில் 2 மாநிலங்களில் முதல்வராக இருந்த ஒரே நபர் என்ற சிறப்பும் இவருக்கு இருக்கு. 1976 முதல் 1986 வரை உத்தரபிரதேச முதல்வராக 3 தடவையும், உத்தரபிரதேசத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டபோது அம்மாநில முதல்வராக 2002 முதல் 2007 வரை இருந்தார். ராஜீவ்காந்தி ஆட்சியில் நிதி, வர்த்தகம், வெளியுறவுத்துறை என பல முக்கிய பதவிகளில் இருந்தவர்.
கடந்த ஆண்டு அவர் ஆந்திரா கவர்னராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆந்திர ஜோதி, ஏபிஎன் தொலைக்காட்சி சானல் கவர்னர் திவாரி 3 பெண்களுடன் உல்லாசத்தில் இருந்த செக்ஸ் காட்சிகளை பல தடவை மீண்டும், மீண்டும் ஒளிபரப்பியது. திவாரியின் சொந்த மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ராதிகா என்ற பெண் காண்டிராக்டர் ஆந்திராவில் சில கனிம சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்க கவர்னரின் தயவை நாடி.னார். ஆனால் திவாரி ஏமாற்றியதால் இந்த 3 பெண்களையும் செக்ஸ் உல்லாசத்தின் போது மைக்ரோ கேமராவையும் கேமரா செல்போனையும் வைத்து கவர்னர் லீலையை பதிவு செய்ததாக ராதிகா கூறினார். இந்த தகவல்களை கேட்டதும் ஆந்திர மக்கள் கொந்தளிப்படைந்துள்ளனர்.
ஏற்கனவே ரோகித் சர்மா என்ற வாலிபர் என் தந்தை என்.டி.திவாரி என்று கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு பரபரப்பு ஏற்படுத்தினார். அவர் தொடந்த வழக்கை டில்லி கோர்ட்டு சமீபத்தில் தான் தள்ளுபடி செய்துள்ளது.
இது தவிர முறையற்ற பல திருமணங்களை செய்து கொண்டதாக இவர் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் இருக்கிறது. 85 வயதிலும் சபலத்தை விடாதவராகவும் கவர்னர் மாளிகையை மன்மதலீலைகளில் அரங்கமாகவும் பயன்படுத்தி இவர் கடைசியில் மைக்ரோ கேமரா மூலம் வசமாக சிக்கிக் கொண்டார்.
நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை எழுப்பிய இந்த காட்சி ஏ.பி.என். ஆந்திர ஜோதி என்ற தெலுங்கு சேனல் ஒளிபரப்பியதை அடுத்து ஒரு மணி நேரத்தில் ஆந்திர ஐகோர்ட்டில், இந்த காட்சிகளை ஒளிபரப்பக் கூடாது என கவர்னர் மாளிகை சார்பில் தடை உத்தரவு பெறப்பட்டது.
ஆனால் செக்ஸ் புகாரில் சிக்கிய கவர்னரின் லீலைகளை பார்த்த மக்கள் கவர்னர் மாளிகையை முற்றுகையிட்டு போரட்டத்தல் ஈடுபட்டனர். இதில் அவருடைய உருவபொம்மை எரிக்கப்பட்டும். அவருக்கு எதிராக அனைத்து கட்சித் தலைவர்களும் போராட்டத்தல் ஈடுபட்டனர்.
இந்த சூழ்நிலையில், உடல் நிலத்தை கருத்தில் கொண்டு பதவியை ராஜினாமா செய்துள்ளதாக ஆந்திர கவர்னர் திவாரி கடித்தில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சட்டீஸ்கர் மாநிலத்தின் புதிய கவர்னராக இருந்து வரும் இக்காடு சீனிவாசன் லஷ்மி நரசிம்மன் கூடுதலாக ஆந்திர மாநிலத்தை கவனிப்பார் என ராஷ்ட்டிரபதிபவன் வட்டாரம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment